Monday, June 27, 2005

கவிஞர் ஆக்டேவியோ பாஸ்



ஆக்டேவியோ பாஸ் (Octavio Paz 1914-1998 ) என்கிற லத்தீன் அமெரிக்கக் கவிஞர் மார்ச் 31 , 1914 இல் மெக்ஸிகோ நகரத்தில் பிறந்தார் . பாஸின் தாத்தா இந்திய கருப்பொருளை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார். பாஸின் தந்தை ஒரு அரசியல் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார் . தனது தாத்தாவின் சொந்த நூலகத்தில் இருந்து இலக்கிய அறிவைப் பெற்ற பாஸ் , சில இளம் கவிஞர்களுடன் சேர்ந்து தனது 17வது வயதிலேயே Barandal (Balus - trade) - 1931 என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதன் வாயிலாக தனது கவிதைகளை எழுதி வெளியிட்டார் .1933 ஆம் ஆண்டு Luna Silvestre (Forest Moon) என்னும் தனது முதல் நூலை வெளியிட்டார். சிலி நாட்டுக் கவிஞரான பாப்லோ நெருடா , பாஸின் கவிதைகளைப் படித்துவிட்டு பாஸை வெகுவாக ஊக்குவித்தார். பாஸ் தனது கவிதைகளில் வார்த்தை இடமாற்ற(Anagram ) உத்தியைக் கையாண்டார்.

கவிதையின் சொற்களை
நாம் ஒரு போதும் சொல்வதில்லை
கவிதை நமக்குச் சொல்கிறது.

என்று கூறிய பாஸின் கவிதைகள் அனைத்தும் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.Poemas 1935-1975 (1981) and Collected Poems, 1957-1987 (1987).

இந்தியாவிற்கான மெக்ஸிக தூதராக 1962 இல் பாஸ் நியமிக்கப்பட்டார். இந்தியாவால் மிகவும் கவரப்பட்ட பாஸ் The grammarian Monkey மற்றும் East Slope ஆகிய நூல்களை எழுதினார். இந்தியாவை Cosmic Metrix என்றழைத்தார் . In light of India என்ற கட்டுரையில் இந்தியாவைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அக்டோபர் 2, 1968 , மெக்ஸிகோவில் ஒலிம்பிக் போட்டிக்கு முந்தைய சில தினத்தில் , மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த பொழுது சில மாணவர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொள்ளப்பட்டார்கள் (massacre of students at Plaza Tlateloco ). இதைக் கண்டு வேதனை அடைந்த பாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1990 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப்பெற்ற பாஸ் , தனது 84 வது வயதில் காலமானார் (ஏப்ரல் 19, 1998. )

எலியட் வெயின்பெர்கர் (Eliot Weinberger) தொகுத்துள்ள ஆக்டேவியாபாஸின் Collected Poems, 1957-1987 என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் இடம்பெற்றுள்ள சில கவிதைகளைக் கள்ளழகர் என்பவர் , தமிழில் மொழிபெயர்த்து , அக்டேவியாபாஸ் கவிதைகள் என்று ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதை...

ஞானக்குளியலின் விளைவுகள்

இளம் ஹாசன்
ஒரு கிருத்தவப் பெண்ணை மணக்கும் பொருட்டு
ஞானக்குளியல் செய்விக்கப்பட்டான்

பாதிரியார் அவனுக்கு
எரிக் எனப் பெயரிட்டார்,
எதோ அவன் ஒரு ஏவுகலம்
என்பது போல

இப்பொழுது
அவனுக்கு இரண்டு பெயர்கள்
ஒரேயொரு மனைவி

ஹாசன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு சிரிப்பவன் என்று பொருள் .

இந்தக் கவிதையை யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இங்கே இடவில்லை. இந்தக் கவிதையைப் படித்தவுடன் நாகூர் ரூமி எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலின் முதல் பக்கத்தில் படித்தது ஞாபகத்திற்கு வருகிறது .

பெர்னாட்ஷா சொல்லியிருக்கிறார் ... இந்த உகலத்திலேயே தலைசிறந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் தான் .. ஆனால் இந்த உகலத்திலேயே மிக மோசமான சமுதாயம் இஸ்லாம் தான்.. அவர் சொன்னதன் முதல் பகுதியை எந்தப் பேச்சுமின்றி முஸ்லீம்கள் அனைவரும் உடனே ஏற்றுக்கொள்வர் , இரண்டாவது பகுதியை முஸ்லீம் அல்லாதவர்கள் ஏற்றுக்கொள்வர் -
நாகூர் ரூமி


எழுத்தாளர்கள் மொழியின் பாதுகாவலர்கள் - ஆக்டேவியோ பாஸ்

குறிப்பு நூல்கள்

1) காலச்சுவடு இதழ்
2) ஆக்டேவியா பாஸ் கதைகள் - கள்ளழகர்
3) இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி
4) லயம் சிற்றிதழ்

மேலும் சில இணைய தளங்கள் ...

4 comments:

Anonymous said...

நல்ல பதிவு. நன்றி.

கருத்துச் சொன்னவரு: மாண்ட்ரீஸர்

Anonymous said...

பாஸ் இந்தியாவில் தூதராக இருந்த காலத்தில் சில 'இந்திய' கவிதைகளையும் எழுதியுள்ளார். கன்னியாகுமரி, ஊட்டி பற்றிய கவிதைகளைப் படித்ததாக நினைவு

கருத்துச் சொன்னவரு: M. Sundaramoorthy

Anonymous said...

மரவண்டு, நல்ல குறிப்பு. கொஞ்சம் கூட எழுதியிருக்கலாம்.

கருத்துச் சொன்னவரு:

Anonymous said...

மரவண்டு, நல்ல குறிப்பு. கொஞ்சம் கூட எழுதியிருக்கலாம்.

கருத்துச் சொன்னவரு: ஆழியாள்

கருத்துச் சொன்னவரு: