Tuesday, July 12, 2005

ஃபெடரிக்கோ கார்சியா லார்கா




ஃபெடரிக்கோ கார்சியா லார்கா(Federico Garcia Lorca ), ஜூன் 5 ,1898 இல் , ஸ்பெயின் நாட்டில் , ஒரு நிலக்கிழாருக்கும் ஆசிரியைக்கும் மகனாகப் பிறந்தார். லார்கா தன் இளம் வயதிலேயே ஒரு சிறந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தார். கல்லூரிப் பட்டப் படிப்பில் நாட்டமில்லாத லார்கா , கவிதை நினைவோடு , கற்பனையில் மிதந்து வந்தார். நாடோடி மக்களுடன் சிநேகம் கொண்டு அவர்களின் கிராமியப் பாடல்களைக் கேட்டு இன்புற்றார் . லார்காவின் பெரும்பாலான கவிதைகளுக்கான கரு, கிராமியப் பாடல்களில் இருந்தே பெறப்பட்டது ( கீழிருக்கும் கவிதையும் கூட )

லார்கா , ஓர் ஓரினச் சேர்க்கைப் பிரியர் , இதில் தவறு ஒன்றும் இல்லை எனத் தன் படைப்புகள் வழியே வாதிட்டார் .
" ஏவாள் என்பவள் , ஆதாம் உடம்பின் ஒரு பாகம் என்றால் , ஆதாமும் ஏவாளும் ஒன்று தானே.. பிறகு ஏன் உடலுறவில் மட்டும் பால் பேதம் ? " என்று தத்துவம் பேசினார்.

தனது நண்பர் மெஜியாஸ் (Ignacio Sanchez Mejias) காளைப் போரில் இறந்த பொழுது , லார்கா பாடிய இரங்கற்பா ( Lament ) , அவரது கவிதைப் படைப்புகளிலேயே மிகவும் சிறந்ததாதக் கருதப்படுகிறது.

இவரது நாடகங்களில் Blood Wedding (1933) மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

1936 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் லார்கா கொல்லப்பட்டார் (August 19,1936 ) .

லார்காவின் இறப்புக்குப் பின்பே அவர் பரவலாக அறியப்பட்டார் .இவர் அமெரிக்காவில் வசித்தபொழுது
எழுதிய கவிதைகள் (The Poet in Newyork) என்ற தலைப்பில் வெளியானது.


நம்பிக்கையற்ற மனைவி

புனித ஜேம்ஸ் இரவொன்றில்
தெருவிளக்குகள் அணைந்ததும்
சில்வண்டுகள் ஒளியேற்றின

தெருக்கோடி முனையில்
யுவதி ஒருத்தியின்
தூங்கிக் கொண்டிருந்த மார்புகளைத்
தொட்டுத் தடவினேன்..

கண நேரத்தில்
அவள் மார்புகள் இரண்டும்
கூரிய ஹியாசிந் மலரின்
இதழ்களைப் போல்
கிளர்ந்தெழுந்தன...

அவள் ஆடைக் கஞ்சியின் மொரமொரப்பு
பட்டு ஆடையை
பத்துக் கத்திகளால் கிழிப்பது
போன்று சத்தமிட்டது ..

பசுமையற்ற வெளிறிய மரங்கள்
உயரமாக வளர்ந்திருந்தன
ஆற்றுக்கு அப்பால்
நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன

அவளை என்னோடு
அழைத்துச் சென்றேன்

கரிய பெர்ரி மரங்களையும்
நாணல் புதர்களையும்
ஹாதார்ன் முட்செடிகளையும்
கடந்து சென்றோம்

அவள் கூந்தல் கற்றைகள் படியுமளவு
பள்ளம் ஒன்று தோண்டினேன்

நான் என் கழுத்துப்பட்டையை
நீக்கினேன்

அவளோ தன் ஆடையைக் களைந்தாள்

கைத்துப்பாக்கியுடன் கூடிய
சட்டையை நான் அவிழ்த்தேன்

அவள் தனது நான்கு உள்ளாடைகளையும்
உதறி விட்டாள்

வெள்ளியும் முத்துக்களும்
அவள் மேனியின் தகதகப்பிற்கு
ஈடாகாது

என் கரம் பட்டதும்
அவள் தொடைகள் இரண்டும்
மீன்களைப் போல துள்ளிவிழுந்தன

அதில் ஒரு பாதி தணலாய்க் கொதித்தது
மறுபாதி ஜில்லென்றிருந்தது

"அந்த" அனுபவம்
கடிவாளம் இல்லாத குதிரையொன்றில்
உல்லாசப் பயணம்
செய்தது போல் இருந்தது எனக்கு..

அன்று அவள் சொன்ன வார்த்தைகளை
ஆண்மகனாகிய என்னால்
திரும்பச் சொல்லமுடியாது

அவள் முத்தங்களாலும் , மணலாலும்
கறைபட்டுப் போனேன்

நானும் அவளும்
ஆற்றங்கரையை விட்டுப் புறப்பட்டோம்

லில்லிப்பூக்களின் கத்திமுனைகள் காற்றோடு
சண்டையிட்டுக் கொண்டிருந்தன

நானொரு நாடோடி மனிதனாக
மிக கண்ணியமாகத் தான்
அவளுடன் நடந்து கொண்டேன்

வைக்கோல் நிற பட்டாடைகளை
அவளுக்கு வாரி வழங்கினேன்

இருந்தும் நான் அவளைக் காதலிக்க முடியாது
ஏனெனில்
அவள் ஒரு கன்னிப் பெண் என்று நினைத்துத்தான்
ஆத்தங்கரைக்கு அழைத்துச் சென்றேன்
ஆனால்
அவளுக்கோ
ஏற்கனவே ஒரு கணவன் இருக்கிறான்
என்ற விஷயத்தை
இப்பொழுது தான் அவள் சொல்கிறாள் ...


**************************************************
The Faithless Wife - Federico Garcia Lorca

It was on St. James night
and almost as if I was obliged to.
The lanterns went out
and the crickets lighted up.
In the farthest street corners
I touched her sleeping breasts,
and they opened to me suddenly
like spikes of hyacinth.
The starch of her petticoat
sounded in my ears
like a piece of silk
rent by ten knives.
Without silver light on their foliage
the trees had grown larger
and a horizon of dogs
barked very far from the river.

Past the blackberries,
the reeds and the hawthorn
underneath her cluster of hair
I made a hollow in the earth
I took off my tie,
she took off her dress.
I, my belt with the revolver, She, her four bodices.
Nor nard nor mother-o’-pearl
have skin so fine,
nor does glass with silver
shine with such brilliance.
Her thighs slipped away from me
like startled fish,
half full of fire,
half full of cold.
That night I ran
on the best of roads
mounted on a nacre mare
without bridle or stirrups.
As a man, I won’t repeat
the things she said to me. The light of understanding
has made me most discreet.
Smeared with sand and kisses
I took her away from the river.
The swords of the lilies
battled with the air.

I behaved like what I am.
Like a proper gypsy.
I gave her a large sewing basket,
of straw-colored satin,
and I did not fall in love
for although she had a husband
she told me she was a maiden

***************************************

7 comments:

Anonymous said...

//1936 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் லார்கா கொல்லப்பட்டார்//
அரசியல் காரணங்களுக்காகக் கொலைசெய்யப்பட்டார் என்பதுதான் உண்மை. மொழிபெயர்ப்பு உங்களுடையதா? ஆக்டேவியோ பாஸ், லோர்க்கா, மணிக்கொடி இதழ் என்று தொடர்ந்து அறிமுகப் பதிவுகளை எழுதிவருவது நல்ல விஷயம். தொடருங்கள்...

கருத்துச் சொன்னவரு: மாண்ட்ரீஸர்

Anonymous said...

மரவண்டு நல்ல பதிவு கார்சியாவின் "The House of Bernarda Alba" எனும் நாடகப்பிரதியை நான் மேடை ஏற்றுவதற்காக எடுத்து வைத்திருக்கின்றேன். கவிதை நன்றாக உள்ளது. நன்றி

கருத்துச் சொன்னவரு: karupy

Anonymous said...

நல்ல பெயர்ப்பு

கருத்துச் சொன்னவரு: -/பெயரிலி.

Anonymous said...

நண்பர் மெஜியாஸ்
காளைப் போரில் இறந்த பொழுது , லார்கா பாடிய இரங்கற்பா
http://boppin.com/lorca/lament.html

இது நல்ல கவிதை!

கருத்துச் சொன்னவரு: தங்கமணி

Anonymous said...

நல்லதொரு மொழிபெயர்ப்பு. அண்மையில் எஸ்.ராமகிருஷ்ணனும் கார்சியா லார்கா பற்றி உயிர்மையில் எழுதியிருந்ததை வாசித்தது நினைவு.

கருத்துச் சொன்னவரு: DJ

Anonymous said...

அன்புள்ள மாண்டரீஸர், கறுப்பி,பெயரிலி, தங்கமணி மற்றும் டிஜே

அனைவருக்கும் நன்றி

<< மொழிபெயர்ப்பு உங்களுடையதா ? >> ஆம் :-)



கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

Dear Ganesh,

You are doing some good posts. Pl. continue.

- Suresh Kannan

கருத்துச் சொன்னவரு: suresh kannan